வணக்கம்,
24.10.2020 நவராத்திரி விழாவை முன்னிட்டு எமது மாணவச்செல்வங்களையும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கவிருக்கும் அனைவரையும் எமது கலாச்சார உடைகளுடன் வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். நவராத்திரி விழாவன்று வகுப்பு வகுப்பாகச் சென்று மாணவர்களைப் படம் எடுக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
பெற்றோர்குழு மற்றும் ஆசிரியர்கள் இவர்களுடன் நிர்வாகமும் சேர்ந்து பெற்றோரிடம் ஒர் அன்பான வேண்டுகோள்.
நவராத்திரி விழாவைக் கருத்திற்கொண்டு தங்கள் பிள்ளைகளின் உணவுப்பெட்டிக்குள் இடைவேளை உணவுடன் சேர்த்து இவ்விழாவுக்குப் பொருத்தமான உணவுவகையில் ஒன்றேனும் சேர்த்தால் நன்று. அதனால் அவர்கள் மகிழ்வடைவார்கள் என்பதில் ஐயமில்லை.
இணைப்பைப் பார்க்கவும்:
மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றோம்.
நோர்வே சுகாதார அமைப்பினதும் ஓசன் பாடசாலையினதும் விதிமுறைகளுக்கமைய தற்போதுள்ள கொறோனா தொற்றுத்தடுப்புத் திட்டவழிமுறையைக் கையாளும்படி வேண்டுகின்றோம். புரிந்துணர்வுக்கு நன்றி.
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்