வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
தமிழ் தேசிய தொலைக்காட்சி TTN
தியாக தீபன் திலீபன் நினைவு சுமந்த நிகழ்வுகளை அன்னை பூபதி தமிழ் கலைக்கூட மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் 12.09.2022 அன்று ஒளிப்பதிவுகளை செய்யவேண்டி உள்ளது. தங்கள் பிள்ளைகள் யாராவது இந்நிகழ்வில் கலந்து கவிதை அல்லது பேச்சு அல்லது திலீபன் நினைவு சுமந்த பாடல்கள் போன்ற நிகழ்வுகளை வழங்கலாம். இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க விரும்பும் மாணவர்களின் பெற்றோர் விரைவாக வகுப்பாசிரியரிடம் அல்லது வளாகக் கலைப்பொறுப்பாளருடன் தொடர்புகொள்ளவும்.
20வது ஆண்டுவிழா 28.01.2023 நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நாளை அனைவரும் குறித்துவைக்கவும்.
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்