மாவீரர் நினைவாக நடாத்தப்படும் ஓவியப்போட்டி 2020
போட்டிக்கான தலைப்புகளும் பிரிவுகளும்.
பிரிவு 1 (5ஆம், 6ஆம் வகுப்பு)
-
தமிழீழ தேசியச்சின்னங்களில் ஒன்று அல்லது
-
நடுகல் வழிபாடு.
பிரிவு 2 (7ஆம், 8ஆம் வகுப்பு)
-
மாவீரர் துயிலுமில்லம் அல்லது
-
தமிழீழ வரைபடம் (தமிழரின் பூர்வீக பிரதேசங்களின் பெயர்களுடன்)
பிரிவு 3 (9ஆம், 10ஆம் வகுப்பு)
-
நல்லூரில் அமைந்திருந்த தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி அல்லது
-
ஈழத்தமிழர் நில அபகரிப்பும் திட்டமிட்ட குடியேற்றங்களும்.
ஓவியப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு 1மணிநேரம்
வழங்கப்படும்.
பாடசாலை நடைபெறும்போது வகுப்பு நேரத்தில் போட்டி நடைபெறும்.
ஓவியத்தாள் தவிர்ந்த தேவையான உபகரணங்களை மாணவர்கள் கொண்டுவருதல் வேண்டும்.
வரையப்போகும் ஓவியத்தை வீட்டில் பயிற்சி செய்துகொள்ளலாம்.
பயிற்சி செய்த ஓவியத்தாள் போட்டி நடைபெறும்போது வகுப்பறைக்குள்கொண்டுவர அனுமதிக்கப்பட மாட்டாது.
மாணவர்களுக்கான சுட்டிலங்கங்களை வளாகங்கள் போட்டித்தாளின்பின்புறத்தில் எழுதிவிடுதல் வேண்டும்.
ஓவியத்தாளை முழுமையாகப் பயன்படுத்துதல் வேண்டும்.
(வரைந்து, வர்ணம் தீட்டியிருத்தல் வேண்டும்)
ஒவ்வொரு பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டுள்ள தலைப்புக்களில் ஒன்றைமட்டுமே போட்டியாளர்கள் தெரிவு செய்து வரைந்து, வர்ணதீட்டுதல் வேண்டும்.
»