தமிழ் கல்வி, இணையமுற்றத்தில் (Teams)
இன்றைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு தொய்யன் வளாகத்தின் தமிழ் கல்வி, எதிர்வரும் சனிக்கிழமை 07.11.20 இருந்து இணையமுற்றத்தில் (TEAMS) நடாத்துவது என திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் சுகாதாரப் பாதுகாப்பபைக் கருத்தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்படுகிறது.
கடந்த வாரங்களாக நோர்வேயில் பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கம், எங்களின் நாளாந்த வாழ்கையை மேலும் மோசமாகப்பாதிக்க ஆரம்பித்துள்ளது. நோய்க்கிருமி தொற்றும் அபாயத்தை தடுக்கும் நோக்குடனே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது, ஆதலால் தேவையற்ற ஒன்று கூடல்கள், விருந்துபசாரங்களை தவிர்த்து பிள்ளைகள் மற்றும் சக மனிதர்களினதும் உடல் நலத்தில் அக்கறை செலுத்துமாறு பெற்றோர்களை உரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
அங்கத்தவர், பாதுகாவலர் தகவல்களைப் புதுப்பித்தலுக்கான படிவம்.
இவ் விண்ணப்ப படிவத்தை நிரப்பி அனுப்புவதன் மூலம் தங்களுக்கான இணையமுற்ற பயனாளர் பெயர், கடவுச்சொல் என்பவற்றை அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்லிருந்து பெற்றுக்கொள்வீர்கள். இத் தகவல்கள் தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும் ஆகவே காலத்தை கருத்தில் கொண்டு தாமதிக்காது இவ் விணப்பத்தை நிரப்பி அனுப்பவும்.
அன்னையின் மாணவர்களுக்கான தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி ஒன்று அன்னையால் உருவாக்கப்படவுள்ளது. இது fornavn@elev.annai.no என்ற வடிவில் அமையும். இனிவரும் காலங்களில் இந்த மின்னஞ்சல் முகவரியே மாணவர்களின் அன்னையின் இணையவழிக்கல்வியின் (TEAMS) நுழைவு முகவரியாக அமையும். தங்கள் விண்ணப்பப்படிவம் கிடைக்கப் பெற்றதும் இவற்றைத் தயாரித்து தங்களுக்கு அனுப்பவுள்ளோம்.
நோர்வேயில் கொரோனா கிருமியால் ஏற்படும் பாதிப்புக்களை உடனுக்குடன் அறிய நோர்வே அன்னைமுற்றம்
நிருவாகம்